Friday, November 28, 2008

கனமூலை பாடசாலை மாணவி ஒருவரை காணவில்லை!

கடந்த மூன்று வாரங்களாக கனமூலை பாடசாலை உயர் வகுப்பு மாணவி ஒருவரை காணவில்லை. நோயாளியான அம்மாணவியின் தந்தை உற்பட சிலர் தேடியரித்துவிட்டனர். பொலிசாரிடம் புகார் கொடுத்திருந்தும் இன்னும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையில் குறிப்பிட்ட அந்தமாணவி தன் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து "தான் ஒரு அரையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பகல் நேரங்களில் தான் மயக்கமான நிலையில் இருப்பதாகவும் இரவில் மாத்திரமே தனக்கு சுயநினைவு திரும்புவதாகவும், தான் இருக்கும் அரையில் இருந்து பார்க்கும்போது தூரத்தில் ஒரு பள்ளிவாசல் தெரிவதாகவும்" கூறியிருப்பதாக ஒரு கதை அடிபடுகிறது.

வயது வந்த மாணவி ஒருவர் முஸ்லிகள் செறிந்து வாழும் இடத்தில் இருந்து காணமல் போயிருக்கும் இந்நிலையில் கானமூலைவாசிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது. அத்துடன் அவர்களிடத்தே மாஸ்டர் குடும்பம் என்றும் மௌலவி குடும்பம் என்றும் ஹஜியார் குடும்பம் என்றும் ஜாகிலிய கால கோத்திரக்காரர்கள் போன்று பிளவுபட்ட போக்கே இன்று காணக்கூடியதாக உள்ளது, இன்னும் சில இளம் வயதினர் புனிதமான இஸ்லாமிய இயக்கங்களின் பேரில் இஸ்லாமிய வரையர்றைக்குள் இல்லாத செயட்படுகளையும் மேற்கொண்டு வருகிண்டனர். எது எவ்வாறு இருப்பினும் சமுகத்தில் இமாதிரியான சம்பவங்கள் ஏற்படின் ஊர் வாசிகள் அனைவரும் ஒன்றுபட்டு அம்மாணவியை கண்டுபிடிக்க முயற்சிப்பதே இப்போது அவசியமாகின்றது.