Saturday, June 27, 2015
மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்
Thursday, January 15, 2009
மரணத்திலும் வழிகின்ற பாசம்!
இணையத்தில் மேய்ந்த போதுதான் இந்தப் புகைப்படங்கள் என்னை ஒருகணம் அதிரச்செய்தன. யூதர்களைக் கொன்றதால் சர்வதிகாரியாக மரணித்தான் ஹிட்லர். அவன் சர்வதிகாரிதான். மறுக்கவில்லை. ஆனால், இன்று பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருப்பதற்கு என்ன பெயர்? "ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போர்" என்ற மகுடம் தாங்கி காசாப் பிரதேசத்தில் தனது அனைத்து அட்டூழியங்களையும் அப்பாவி மக்கள் மீது ஏவி விடுகின்றது இஸ்ரேல் படை. நேற்றுக்கூட தங்களது உறைவிடங்கள் தாக்குதலில் தரைமட்டமானதினால் பாடசாலையில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொத்தாக பலியெடுத்திருக்கின்றது.
உலகத்தின் கண்களுக்கு இவையெல்லாம் தெரிந்தாலும் அவை விழித்தெழப்போவதில்லை. ஒரு அறிக்கை... அல்லது ஒரு கண்டனம். அத்துடன் எல்லாம் அடங்கி விடும். மீட்பர்கள் வருவார்கள் என அமெரிக்காவையோ அல்லது அண்டை தேசங்களையோ நம்பிப் பயனில்லை. வேண்டுமானால், செத்தபின் வாய்க்கரிசியிட அல்லது அடுக்கி வைத்து அனல் மூட்ட அவர்கள் அணிவகுத்து நிற்க முடியும்.
இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த தாயும் சேயும் மரணத்தறுவாயில் நடத்தும் பாசப்போராட்டம் இது. இங்கு யார் யாரை மீட்பது?
பாலஸ்தீனத்தில் மட்டும் தானா இந்தப் பாசப்பிணைப்பு...? இல்லவே இல்லை. வீட்டுப் படலையை ஒருமுறை திறவுங்கள்....
இன்பத்திலும், துன்பத்திலும் அல்லாஹ்வை நினைவு கூறுவோம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
இறைவனை ஏமாற்றுபவர்கள், தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீஙக வேண்டும் தனக்கு ஏதேனும் காரிங்கள் நிறைவேற வேண்டும் என்றே கையேந்தி கேட்கிறார்கள் அல்லஹ் அவர்களின் காரியங்களை நிறைவேற்றி கொடுத்த பிறகு, அதை விட்டும் அல்லஹ்வை நினைப்பதை, கேட்பதை நிறுத்தி விடுகிறார்கள்
அல்லஹ் குர்ஆனிலே சொல்லி இருக்கிரான் (விசுவாசம் கொண்டவர்களே, பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள்)நம் உயிர் இருக்கும் காலமெல்லாம் அல்லஹ் இடத்தில் இரு உலக வெற்றிக்கும் கேட்டவன்னமாக இருக்க வேண்டும் நாம் செய்யும் அனைதையும் அல்லஹ் பார்த்து கொண்டுதானிருகிரான் என்பதை நினைவில் கொண்டு அல்லஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்" பாகம் 11 வசனம் 12.
"மனிதனை துன்பம் தீண்டுமானால்(அதனை நீக்குமாறு) அவன் சாய்ந்து படுத்தவனாக அல்லது உட்கார்ந்தவனாக அல்லது நின்றவனாக நம்மை அவன் பிரத்தித்து அழைக்கிறான், பின்னர் அவனுடயதுன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்தனை செய்தவனை போல்(புறக்கனித்து சென்று விடுகிறான், வரம்பு மீருவோருக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த (தீயது இவ்வாறு அலங்காரமாக ஆக்கப்பட்டு விட்டது) அல்லஹ் படைக்கப்பட்ட அனைத்திற்கும் பறவை, பட்சிகள். ஊர்வனங்களுக்கு இரணம் அளிக்கிறான், அவைகளும் அல்லஹ்வை திக்ரு செய்கின்றன. பாகம் 12(வசனம் 6)
"பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு அல்லஹ்வின் மீது பொறுப்பாக இருந்தே தவிர இல்லை. அவை தங்குமிடதையும் அவை ஒப்படைக்கப்பட்டு சேருமிடத்தையும் அவன்( நன்கு) அறிகிறவன் இவையாவும்(லவ்ஹுல் மஹ்Fபூல் என்னும் புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன). பாகம் 12 - வசணம் 15"
எவர்கள் இவ்வுலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் செயல்களுக்குறிய பலன்களை இவ்வுலகத்திலேயே நாம் பூரனமாக அவர்களுக்கு நிறைவு செய்வோம், அவர்களோ அதில் குறைவு செய்யபட மாட்டார்கள்) இன்பத்திலும், துன்பத்திலும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடமே நாம் அனைவரும் நம் தேவைகளை கேட்டு நம் காரியங்களை அவனிடமே ஒப்படைத்து வல்ல இறைவனிடம் மட்டுமே கேட்கக் கூடியவர்களாக நாம் ஆகுவோமாக, அவனே நேர்வழி காட்ட போதுமானவனாக இருககிறான்
உம்மு பஜ்லுர் ரஹ்மான்ஜித்தா, K.S.A
Tuesday, January 6, 2009
நெஞ்சு பொறுக்குதில்லையே ..........
Monday, January 5, 2009
அல்லாஹ்வே! உன்னிடமே மன்றாடுகிறோம்,கெஞ்சுகிறோம்,எங்கள் மக்களை காப்பாயாக!உதவி புரிவாயாக!!
இன்று நம் சமுதாயத்தில் நடைபெறும் தேவையற்ற விஷயங்களினால் ஈமானே பரிபோகிவிடும் என்பதை மனதிற்கொண்டு அவற்றை தவிர்ந்துகொள்ளும் விதத்தை குரான் ஹதீதை அடிப்படையாக வைத்து நானும் தெளிவுபெறலாம் என்று தமாமில் நிலவும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது சுபுஹு தொழ சென்றேன்,
ஆனால் அந்த தொழுகையில் குனூத்து ஓதுவதை கேட்டபின் உள்ளம் உறுகுளைந்து ஏன் அனீதமிழைக்கப்படும் பாலஸ்தீனை பற்றி எழுதி இஸ்லாமிய சகோதரர்க்ளின் உள்ளக்குமுறல்களை ஏகோபித்தவகையில் வல்லோன் அல்லாஹ்விடம் அரபு நாடுகள் என்றில்லாது உலக முஸ்லிம்கள் அனைவரின் இருகறங்களும் எல்லா நேர தொழுகையிலும் ஏந்தப்படவேண்டும் என்று உந்தப்பட்டேன்.
ஆமாம் சகோதரர்களே, சில இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அது சரியோ தவரோ நொண்டி குதிரைக்கு சருக்கியது ஒரு சாக்கு என்பதைபோல் எதையாவது கூறி ஒரு சில நாட்களில் தீர்வு செய்கின்றனர்.
ஆனால் எவ்வித காரணமும் இன்றி அனீதமிழைக்கப்பட்டு எங்கே தீர்வு என்று எங்கள் பாலஸ்த்தீன இஸ்லாமிய உயிர்கள் சேதப்படுத்தப்படுவது ஏன் என்பதை என்னும்போது ஏதோ ஒருகொள்கையில் இருந்துகொண்டு தாவா பனியை செய்யக்கூடிய சிலர் இங்கு தவ் அத் செய்தால் அல்லாஹ் எங்காவது ஒரு மூலையில் யாருக்காவது ஹிதாயத்தை கொடுப்பான் என்று சொன்ன கூற்று உண்மையென்றால் - யா அல்லாஹ் பாலஸ்த்தீனத்தில் இஸ்லாமிய உயிர்கள் கோரமாக கொள்ளப்படுவதற்க்கு இங்கு இருந்து கொண்டு என்போன்றோர் செய்யும் தவறுகள்தான் காரனம் என்று உள்ளம் நடுங்குகிறது.
யாஅல்லாஹ் இத்தனை அவகாசங்கள் தந்தாய் இதுவே போதும் ரஹ்மானே.இனிமேல் எவ்விதத்திலும் உனக்கு புற்ம்பாக எதையும் செய்ய்மாட்டோம் என்று உன்னையே சாட்ச்சியாக்கி சபதமெடிக்கிறோம்.
யாஅல்லாஹ் காஜாவில் பிறக்கும் பச்சிலம் குழந்தையின் இரத்தவாசனை மாருவதற்க்குமுன்னால் அடங்காபிடாரி இஸ்ரவேலனால் அனீதமாக கொல்லப்படுவதை இனியும் பொறுக்க முடியாது
ஒரு தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த பிஞ்சு குழந்தை பசியால்- அருந்தாயின் அமுதுக்காக ஏங்கி கேட்பதைபோல் நாங்களும் கேட்கிறோம்
இனியாவது பாதிக்கும் மக்களை பற்றி கவலைப்படாமலும், ஆடம்பரமாகவும்,திமிராகவும், சுற்றிதிரியும் அரேபிய மன்னர்களின் உள்ளங்களில் ஒரு திருப்பத்தை தந்தருள்வாயா ரஹ்மானே! என்று தவிப்புடன்...........!
A.H.அப்துர் ரஷீத் ரஹ்மானி
-------------------------------------------------
சகோதரர்களே,ஒவ்வொரு தொழுகையிலும் குனூத்து ஓதி துவா செய்யுங்கள், உங்கள் முஹல்லா பள்ளியிலும் சொல்லி துவா செய்ய சொல்லுங்கள்.இது போன்ற கடினமான சூழ்நிலையில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டித்தந்த வழி முறை இது.
Friday, January 2, 2009
மூட நம்பிக்கைகள் உலகில் மறையப்போவது எப்போது?
அன்பான எனதருமை நமதூர் வாசக சகோதர, சகோதரிகளே உங்கள் யாவருக்கும் முதற்கண் என் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
ஒரு நேரத்தில் நமதூர் மக்களிடையே பெரும்பாலும் இல்லத்தரசிகளிடம் நிலவி வந்த ஒரு மூட நம்பிக்கையைப் பற்றி இங்கு ஒரு சிறு கட்டுரை மூலம் விளக்க
விரும்புகிறேன்.
வெளிநாட்டு வாழ்வில் வருடங்கள் பல உருண்டோடி விட்டதால் அப்பழக்கம் இன்றும் நம்மக்களிடம் இருக்கிறதா என்பது தெரியவில்லை... இருப்பினும் சின்னஞ்சிறு பிராயத்தின் அனுபவத்திலிருந்து ஒன்றை இங்கு எழுத வருகிறேன்.
ஆங்கிலப்புத்தாண்டு பிறந்து விட்ட முதல் நாள் அன்று நம் பகுதிகளின் வீடுகளில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டால் அல்லது ஏதேனும் அசொளகரியம் ஏற்பட்டு விட்டால் அன்றைய தினம் சிகிச்சைக்காக
மருத்துவமனை செல்வதை விரும்பமாட்டார்கள். முடிந்தவரை மருத்துவமனை செல்வதை தவிர்த்து விடுவார்கள். காரணம் அன்று மருத்துவமனை சென்றால் அவ்வருடம் முழுவதும் மருத்துவமனை செல்ல நேரிடும் என்ற மூட நம்பிக்கையால்
தான் .
நம் அறியாமையினாலும், மார்க்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வமின்மையாலும் முஹர்ரம் என்றால் என்ன? என்று கேட்பவர்களாகவும் மாறாக ஆங்கிலப்புத்தாண்டை
வரவேற்க அறியாமலேயே சிகப்புக் கம்பளம் விரிப்பவர்களாகவும் தான் நம்மில் பெரும்பாலானோர் இருந்து வருகிறோம்.
வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள், நேரங்கள் மற்றும்
மணித்துளிகளெல்லாம் மனிதன் தன் வாழ்க்கை கட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல அவனாலேயே ஏற்படுத்தப்பட்டது தான் இவைகள் யாவும் என்பதை நாம் இங்கு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
புத்தாண்டு தினம் ஒருவன் சூழ்நிலையால் அழ நேரிடும் பொழுது அவன் ஆண்டு முழுவதும் அழப்போவதில்லை. மாறாக ஒருவன் அத்தினம் சிரித்து மகிழ்வதால்
அவ்வாண்டு முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கப் போவதில்லை.
உலகில் நல்ல நேரம், கெட்ட நேரம் எதுவும் உண்டா? என சஹாபாப் பெருமக்கள் எம்பெருமானார் நபி (ஸல்...) அவர்களிடம் வினவியபோது.. அதற்குப் பெருமானார்
கூறியது என்னவெனில் "எவன் ஒருவன் ஃபஜர் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுகிறானோ அன்றைய முழு தினமும் அவனுக்கு நல்ல நாள் தான்" என்று இயம்பியதாக நாம் ஹதீஸில் பார்க்கின்றோம்.
நம் வாழ்வில் மூட நம்பிக்கைகளுக்கு அவிழ்க்க முடியா முடிச்சிட்டு நல்ல (மார்க்க) நம்பிக்கைகளை சுதந்திரமாக அவிழ்த்து விட முயல வேண்டும். உள்ளங்கை நெல்லிக்கனி போல் மார்க்கத்தை நம் கைகளில் வைத்துக்கொண்டு நாம்
சின்னஞ்சிறு விசயங்களுக்கெல்லாம் அந்நியர்களின் அதாவது
இறைநிராகரிப்போரின் உதவியை நாடுகிறோம். இனி வரும் காலங்களில் நம் யாவரையும் இத்தகைய பெரும் தவறுகள் செய்வதிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக...ஆமீன்..
குடும்பத்தில் பல கஷ்டங்கள் நிறைந்திருந்தாலும் புத்தாண்டு தினம் சாதாரன நாட்களைப் போல் அல்லாது நல்ல கறி சமைத்து சாப்பிடுவது, புத்தாடை அணிவது, மத்தாப்பு கொளுத்துவது இவைகளெல்லாம் மார்க்கத்தில் நிச்சயம் சொல்லப்படாத ஒன்று.
அதுபோல் பிறந்த நாள் அன்று அழுக்கை சட்டை அணிந்திருப்பவன் அன்றே சாகப்போவதுமில்லை. புத்தாடை அணிந்து ஆடம்பர பவனி வருகிறவன் நூற்றாண்டுகள்
பல இவ்வுலகில் வாழப்போவதுமில்லை...
கடலில் மூழ்குபவனுக்கெல்லாம் விலையுயர்ந்த முத்துக்கள்
கிடைப்பதில்லை..ஆனால் மூழ்காமல் ஒருவனுக்கும் முத்துக்கள் கிடைப்பதில்லை. இறைவன் நாடியவனுக்கே தன் ஹிதாயத் என்னும் நேர்வழியைக் காட்டுகின்றான்..
காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எல்லாம் உலக சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஆதிக்கம் செலுத்துபவனின் கட்டளைப்படியே நடக்கக் கூடியதாக இருக்கின்றது.
இதுபோல் ஆயிரம் மூட நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் நம் பகுதிகளில் நிறையவே நிரம்பி இருக்கின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அதை ஒவ்வொன்றாகவோ அல்லது ஒட்டு மொத்தமாகவோ நம் தளத்தில் கட்டுரையாக பதிய வேண்டுகிறேன்.
எனவே நாம் முடிந்தவரை உண்மையான முஸ்லிமாக வாழ முயற்சிப்போம். முடியாவிட்டாலும் முயற்சிப்போம்... நரக நெருப்பிற்கு இரையாக, விறகாக யார் தான் விரும்புவர்? அவைகளெல்லாம் மாயை/இல்லை என்பவர்களைத் தவிர.
இத்தளம் மெருகூட்டப்பட்டு இன்னும் பல தகவல்களுடன் நம்மக்களின் நல்லாதரவுடன் அகிலமெங்கும் வலம் வர வேண்டும் என இத்தருணத்தில் வல்ல இறைவனைப் பிரார்த்தித்தவனாக....
அபுஹசன் - சவுதியிலிருந்து.
செவிட்டில் அறைந்தார் போல்,நாலு கேள்வி???
தாந்தோன்றித்தனமாகவும் மனம்போனபோக்கிலும் நம் ஷரீஅத்தில் தடுக்கப்பட்ட விஷயங்களை செய்துவிட்டு காலம் செய்த கோலம் என்று காலத்தை குறைகூறுவது எவ்விதத்தில் சரியாகும். இப்படி ஒரு சொல் வருமென்பதினாலோ என்னவோ அன்றே பெருமனார் (ஸல்) அவர்கள் எவ்வித்தத்திலும் காலத்தை குறை கூறவேண்டாம் என்று எச்சரித்துவிட்டார்க்ள்.
இன்று ஷரீ அத்தில் அனுமதியில்லா விஷயங்களை தன் குடும்பத்தின் பேரும்,புகழும்தரம்தாழ்ந்துவிடக்கூடாதுஎன்பதற்க்காகவும்,முகஸ்துதிக்காகவும் ஆடம்பரத்தையும் அனாச்சாரத்தையும் தவரு என்று அரிந்திருந்தும் செய்துவிட்டு தவரை சரிசெய்ய முனைவோர் இனியாவது அத்தகைய தவறுகளை தொடறாமலிருக்கவும் அத்தகைய தவறுகள் என்னிலையிலும் குறிப்பாக என்னோடும் நம் சமுதாயத்தோடும் கலந்துவிடாமல் அல்லாஹ் நம்மை பதுகாத்தருள்வானாக-ஆமீன்
இன்ஷா அல்லாஹ் எளிமையாக நடைபெறவேன்டிய சுன்னத்தான விஷயங்களில் தேவையற்ற விஷயங்களை கூடுதலாக்கி தனக்குதானே வேலைபளுவை அதிகரித்து ஈமானையே பரிகொடுக்க செய்யும் விஷயங்களை சுட்டிகாட்டி ஒரும்போதும் அத்தகைய தவறு என் வாழ்விலும் இதைபடிப்போர் வாழ்விலும் நிகாழாமல் அல்லாஹ் அருள்பாளிப்பானாக - ஆமீன்.
A.H.அப்துர் ரஷீத் ஆலிம்